Thursday, 4 September 2014

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல் !!!

Image result for vai ko



மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

                            தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். 

                  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்காமல், தமிழக அரசு ஆணை எண் 71 ன் படி தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை திடீரென்று புகுத்தியுள்ளது. இதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

                   சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் தகுதி, திறமை என்று கூறி 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட மோசடிகளை மீண்டும் செயல்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்