Friday, 4 July 2014

PG-TRB இல் இயற்பியல்,பொருளியல்,வணிகவியல் பாடப் பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண் !!!


                             இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற  
PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு 2 மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. 

              அவை எந்தெந்த வினாக்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது. 

 இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள்

.         நேற்று ஏற்கனவே TET சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது. ஆயினும் அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்

தட்டப்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய நுாலகம் !!!

                  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய  நுாலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.N.கருணாநிதி அவர்கள் தலைமையிலும், பள்ளியின் உதவித் தலைமை ஆசிாியர் திரு.T.K..நந்தகுமார் அவா்கள் முன்னிலையிலும் புதிய நுாலக அறை திறக்கப்பட்டது.  பளளியின் ஆசிாியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.  நுாலகம் நல்ல காற்றோட்ட வசதியுடன் படிப்பதற்கு ஏற்ற நிலையில்  உள்ளதாக மாணவ மாணவியர்கள் தொிவித்தனர். 

                  நுாலகத்தில் தினசாி நாளிதழ்கள், (தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திாிக்கைகள்) கதை,கட்டுறை, அகராதி, வேறு பல நாவல்கள்  படிப்பதற்கு வாய்ப்பாக உள்ளதாக மாணவர்கள் தொிவித்தனர். மேலும் இது போன்ற வாய்பை அளித்த கல்வித்துறை அதிகாாிகளுக்கும் தமிழக அரசிற்கும் மாணவர்கள் நனிறி தொிவித்தனர்.







உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்