Saturday, 30 August 2014

Upper Primary BRC Training For Maths BTs


                           அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

                           அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

                          பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் உங்களுக்காக !!!


1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search): 
                                        தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது. 

2. கூகுள் திங்க் (Google Think) 
                                        கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர். 

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் !!!


                         புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

                        ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும். தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

பள்ளிகளில் மாணவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது: தமிழக அரசு !!!


                    பள்ளிகளில் மாணவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மாணவ, மாணவிகளை எந்த காரணம் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், பிரம்பு உள்ளிட்ட பொருட்களால் அடிக்கக்கூடாது. அவ்வாறு அடித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, 21 August 2014

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம் !!!



                       பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை எம்.ஜி.யார் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





                  

                    

                                     3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                                      கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு


                             தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன. ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

                             ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, விருது வழங்க உள்ளார். விருதில், ரொக்கம், 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். 

Friday, 15 August 2014

அரசு மேல் நிலைப்பள்ளியில் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் !!!

வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை 
அரசு மேல் நிலைப்பள்ளியில் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் !!!

                      68 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.  பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார்.  முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன்  மற்றும் சின்னாலப்பல்லி  ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் ஆகியோர்கள் முன்னிலையில் தட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவரும. பள்ளியின் கல்விக்குழுத் தலைவருமான திரு. மெய்ஞானம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள். 
    
                     பள்ளியின் உதவித்தலைமை ஆசிாியர் திரு.நந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிாியர் அவர்கள் கௌவரவித்தார்கள்.

                   10ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு  வழக்கம் போல் இந்த ஆண்டும்  ஏாிங்கீழ் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சின்னராஜ்  அவர்கள் தலா ரூ.3000, ரூ2000, மற்றும் ரூ.1000 பாிசு வழங்கினார்கள்.

                     இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின், தலைமை ஆசிாியர், ஆசிாிய ஆசிாியைகளின் சார்பில் பாிசுகள் அளிப்பதென முடிவு செய்து அதன் படி இந்த ஆண்டு, முதல் 3 இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.3000, ரூ2000,  மற்றும் ரூ.1000 பாிசு வழங்கப்பட்டது. 

             இதில் தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்)  கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.




பததாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு.அபிசங்கர்.


பததாம் வகுப்பில் இரண்டாமிடம்  பிடித்த மாணவி செல்வி. ரேகா


பததாம் வகுப்பில் 3ம் இடம்  பிடித்த மாணவி செல்வி.மகாலட்சுமி


12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு. சரத்குமார்


12-ம் வகுப்பில் இரண்டாம் பிடித்த மாணவி. சத்யா





12-ம் வகுப்பில் 3-ம் பிடித்த மாணவன் திரு. எல்.பொன்னுமணி.





 தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்)  கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.






அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !!!

அனைவருக்கும் இனிய 68சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!




உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்