வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை
அரசு மேல் நிலைப்பள்ளியில் 68 வது சுதந்திர தின கொண்டாட்டம் !!!
68 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன் மற்றும் சின்னாலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் ஆகியோர்கள் முன்னிலையில் தட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவரும. பள்ளியின் கல்விக்குழுத் தலைவருமான திரு. மெய்ஞானம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
பள்ளியின் உதவித்தலைமை ஆசிாியர் திரு.நந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிாியர் அவர்கள் கௌவரவித்தார்கள்.
10ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏாிங்கீழ் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சின்னராஜ் அவர்கள் தலா ரூ.3000, ரூ2000, மற்றும் ரூ.1000 பாிசு வழங்கினார்கள்.
இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின், தலைமை ஆசிாியர், ஆசிாிய ஆசிாியைகளின் சார்பில் பாிசுகள் அளிப்பதென முடிவு செய்து அதன் படி இந்த ஆண்டு, முதல் 3 இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.3000, ரூ2000, மற்றும் ரூ.1000 பாிசு வழங்கப்பட்டது.
இதில் தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்) கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.
பததாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு.அபிசங்கர்.
பததாம் வகுப்பில் இரண்டாமிடம் பிடித்த மாணவி செல்வி. ரேகா
பததாம் வகுப்பில் 3ம் இடம் பிடித்த மாணவி செல்வி.மகாலட்சுமி
12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் திரு. சரத்குமார்
12-ம் வகுப்பில் இரண்டாம் பிடித்த மாணவி. சத்யா
12-ம் வகுப்பில் 3-ம் பிடித்த மாணவன் திரு. எல்.பொன்னுமணி.
தட்டப்பாறை (புது வாழ்வு திட்டம்) கிராம வருமை ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ரூ.2000 வழங்கப்பட்டது.