கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை (05/04/2020) ரேஷன் கடைகள் இயங்காது என அறிவித்துள்ளது.