Thursday, 23 April 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.!!!


               பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இன்று வெளியிட்டார். 

                     இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகளை,

  http://www.dge.tn.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, http://www.dge3.tn.nic.in/
ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

TN GOVT 6% D.A - G.O DOWNLOAD

      மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2015 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 

2. இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.

 3. இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 1222.76/- கோடி ரூபாய் செலவாகும் என அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sunday, 12 April 2015

கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு !!!

                                   தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய் வடைந்துள்ள தாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது. 

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

                             நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்த வசதியை பெறும் முதல் அரசுப் பள்ளி என்ற பெருமையை பெறும் இப்பள்ளி,

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை

                     தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி. 

Friday, 10 April 2015

ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்


                           ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வீடு வாங்குவோர் இந்த மசோதா தொடர்வாக தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் வருமாறு:

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை


                     தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது. 

                  விண்ணப்பங்களை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டே கால் லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ் தேர்வுகள் வெளியாகும் என்பதால், அதற்கு முன்பே விண்ணப்ப விநியோகத்தைத் துவக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்


                                   GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது. 1. GO 252/ 05.10.2012 & GO 244/30.11.2013) 60% மதிப்பெண் பெறுபவர்களுக்கு முதன் முதலில் அறிவித்த WTGE(SLAB SYSTEM) முறை.

                            2. GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வு பற்றி அறிவித்தது.

விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


                                  பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு !!!


                     இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
                      இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை கூறுகையில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும் ஆகும்.மேலும், நிகழாண்டில் பள்ளி தொடங்கிய உடன் முன் கூட்டியே இலவச பயண அட்டை வழங்கவும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம் அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படஇருக்கிறது

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்