Wednesday, 24 December 2014

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?


Dial *99*99# from your Mobile handset 

                     சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

                      காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும். ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம்.

 எஸ்.பி.ஐ., மறுப்பு:

                 இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை, வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ் மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்து இருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு, திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.

COURTESY :  www.padasalai.net

Sunday, 7 December 2014

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை !!!


               பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள், வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.


                           பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 5; பத்தாம் வகுப்புக்கு மார்ச் 19ல், பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுகள் வரும் 10ம் தேதி துவங்க உள்ளன.பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில், மாநில அளவில், தரப்பட்டியலில் மாவட்டம் முன்னேறியதுடன், அதிக மாணவர்களும், ரேங்க் பெற்றனர்.முழு பாடத்தையும் மாணவர்கள் எழுதவுள்ளதால், தற்போது அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டு, மாதிரித் தேர்வுகள் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் மீது, ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இத்துடன், காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


HR.SEC.HM. PROMOTION PANEL PREPARATION


    HR SEC HM PROMOTION PANEL PREPARATION   01.01.2015 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள், முதுகலை மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் , அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்வதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விரிவான விவரங்களுடன் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள்..

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்